ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு விசைப்படகு பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 80 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவு தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

தொடர்ந்து மீனவர்களை விரட்டி முனியாண்டி என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்து தங்கராஜ் (40), லிங்கம் (55), செல்வம் (55), இருளாண்டி (45) ஆகிய 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். விசாரணைக்குப்பின்னர் மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு விசைப்படகு பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: