தொழிலாளி தற்கொலை

 

ஆண்டிபட்டி, ஜூலை 22: ஆண்டிபட்டி அருகே வைகை அணை கே.கே.காலனி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(32). கூலித்தொழிலாளி.உதயகுமாருக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி வழக்கம் போல், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உதயகுமாரின் மனைவி அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து வீட்டில் பார்த்த போது, உதயகுமார் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை போலீசார் உதயகுமாரின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: