அதன்பிறகு, 2024ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இது சட்ட விரோதமானது. இதுபோல குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்க எந்த அவசியமும் இல்லை என்பதால் நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீண்ட காலமாக இயங்க கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை அளித்தார். அந்்த பரிந்துரையை பரீசிலீத்து நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், கல்வித்துறை செயலாளர் மற்றும் தனியார் பள்ளி இயக்குனர் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். இதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி குமரப்பன், ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
The post தனியார் பள்ளிகளுக்கு நிரந்த அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பள்ளி கல்வித்துறை இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
