வனக் காப்பாளர், வனக்காவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4 பணி) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எட்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 25ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் தேர்வாணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வனக் காப்பாளர், வனக்காவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: