தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர் திடீர் ஆய்வு

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம், மானம்பாடி, வீராக்கன், திருவாய்பாடி மற்றும் பட்டம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.விவசாயிகளிடமிருந்து தினந்தோறும் பெறப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்கிற்கு பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். சேமிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் இளங்கோ, திருப்பனந்தாள் வேளாண் உதவி இயக்குனர் முகமது பாரூக், வருவாய் கோட்டாட்சியர் லதா, திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, திருவிடைமருதூர் தாசில்தார் சந்தனவேலு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்….

The post தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: