மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்களில் மண்டலம் 1 தலைவர் வாசுகி, மண்டலம் 2 சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3 பாண்டிச்செல்வி, மண்டலம் 4 முகேஷ் சர்மா, மண்டலம் 5 சுவிதா ஆகிய 5 மண்டலத் தலைவர்களுடன், நகரமைப்புக் குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமி என 7 பேர் ராஜினாமாவும் நேற்று ஏற்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனிடம் வழங்கப்பட்டு, இக்கடிதங்கள் பரிசீலித்து ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 5 மண்டலத் தலைவர்கள், இரு குழு தலைவர்கள் இடங்கள் காலியானதாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநகராட்சிக்கான புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
The post மதுரை மாநகராட்சி வரி வசூலில் முறைகேடு எதிரொலி 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேரின் ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.
