கண்களை கவரும் கோழிக்குஞ்சுகள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 600 மனுக்கள் மீது உடனடி விசாரணை

 

தஞ்சாவூர், ஜூலை 8: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 600 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உரிய சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார்.

இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்கள். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக்ராஜா, சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கண்களை கவரும் கோழிக்குஞ்சுகள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 600 மனுக்கள் மீது உடனடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: