மானாமதுரை, ஜூன் 23: மானாமதுரை வழியாக சென்ற ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மானாமதுரை வந்த போது, ரயில்வே எஸ்ஐ தனுஸ்கோடி தலைமையில் வழக்கமாக பெட்டிகளில் சோதனையிட்டபோது, ரயில்பெட்டி கழிப்பறை அருகே 8 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார், அந்த மூட்டைகளில் இருந்த 160 கிலோ அரிசியை கைப்பற்றி உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
The post ராமேஸ்வரம் ரயிலில் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.
