இதைத்தொடர்ந்து, திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும் போது அதற்கு அடுத்து என்ன நிலை எடுப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில கட்சிகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமையும். சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்கிற முடிவாக எதிர்காலத்தில் அமையக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது எதிர்காலத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து செல்லும்: திருநாவுக்கரசர் பேட்டி appeared first on Dinakaran.
