திருப்பூர்,மே16: திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). பனியன் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மகன்,மகள் உள்ளனர்.இந்நிலையில் செந்தில்குமார் பலரிடம் கடன் பெற்றுள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் காணப்பட்ட செந்தில்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பனியன் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.
