பாஜ கூட்டணியில் மேலும் பல கட்சிகள்: ஜி.கே.வாசன் ஆசை

ஈரோடு: பாகிஸ்தான் மீதான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு, திண்டலில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: பொள்ளாச்சி சம்பவத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு இனி அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக மிக சரியான தீர்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜ, தமாகா கூட்டணியில் மேலும் பல கட்சிகளும் இணையும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சிவகிரியில் கடந்த வாரம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ராமசாமி, பாக்கியம் தம்பதியின் குடும்பத்தினரை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

The post பாஜ கூட்டணியில் மேலும் பல கட்சிகள்: ஜி.கே.வாசன் ஆசை appeared first on Dinakaran.

Related Stories: