ஆறுமுகநேரி நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

ஆறுமுகநேரி, மே 13: ஆறுமுகநேரி கிளை நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் விழா நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகளுக்கு புத்தக கண்காட்சி நடைபெற்றது. மேலும் கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், வாள்வீச்சு, அடி முறை, சதுரங்கம், கேரம், கபடி உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பேராசிரியர் அசோக்குமார் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி கிளை நூலகர் சோமசுந்தரி செய்திருந்தார்.

The post ஆறுமுகநேரி நூலகத்தில் கோடை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: