தவத்தாரேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை, மே 10: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்தில் மே 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்புவனம் தாலுகா, தவத்தாரேந்தல் கிராமத்தில், மே.14, காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெற
லாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post தவத்தாரேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: