இந்த தேர்வில் ராணி தேர்ச்சி பெற்று 346 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதில், தமிழ் பாடத்தில் 89 மதிப்பெண் பெற்றுள்ளார். இது குறித்து மூதாட்டி ராணி கூறியதாவது: 1972-ல் பியுசி படித்தேன். பின்னர், தட்டச்சு கற்றுக்கொண்டேன். சிறிது காலம் சத்துணவில் பணியாற்றி உள்ளேன். பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்தேன். இது குறித்து எனது மகன், மகளிடம் தெரிவித்தேன். அவர்கள், படிக்க சொல்லி எனக்கு ஊக்கம் அளித்தனர். சட்டம் படிக்க விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கல்விக்கு வயது தடையில்லை 70 வயது மூதாட்டி தேர்ச்சி appeared first on Dinakaran.
