வாலிபரை மிரட்டிய பார் ஊழியர் கைது

 

பேட்டை,மே 8: பேட்டை எம்ஜிஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் சுத்தமல்லி தீன்நகரை சேர்ந்த ஜமாலுதீன் மகன் பஷீர் இப்ராஹீம் (31), பேட்டை மயிலப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி என்ற மதன் (24) ஆகியார் ஊழியராக பணி செய்துவந்தனர். பாரில் சம்பளம் சரிவர தராததால் பஷீர் இப்ராஹீம் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவருடன் பாரில் பணிசெய்த மாடசாமி, மீண்டும் வேலைக்குவருமாறு பஷீர் இப்ராஹீமை செல்போனில் அழைத்துள்ளார்.

ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்டை ஐடிஐ பஸ்நிறுத்தம் அருகே பஷீர் இப்ராஹீம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த மாடசாமி, அவரை அரிவாளை காட்டி மிரட்டினார். இதுகுறித்து பஷீர் இப்ராஹீம் பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மாடசாமியை கைது செய்தனர்.

The post வாலிபரை மிரட்டிய பார் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: