இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டன் ரக துணிகள் மற்றும் புதிய ஜவுளி ரகங்கள் நேற்று அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி கொள்முதல் செய்ய வந்திருந்தனர்.
இந்த வார சந்தையில் கோடை வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஜவுளி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின.குறிப்பாக கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றால் இந்த வார ஜவுளிச் சந்தையில் சில்லரை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஈரோடு ஜவுளிச்சந்தையில் கோடைகால ஜவுளி விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.
