லட்சக்கணக்கில் நீங்கள் வந்தால்தான் மாநாடு முழுமை பெறும். மாநாட்டுக்காக நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை அறிவேன். ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன், மாமல்புரம் நோக்கி அணி வகுக்கத் தயாராகுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு மாமல்லபுரம் நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.
