கோவை, மே 7: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கோடை மழை பேய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல், சேரன்மாநகர், சரவணம்பட்டி, கணபதி, வடவள்ளி, லாலி ரோடு, ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பேய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மருதமலை சாலை, சக்தி சாலை, அவிநாசி சாலை ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று பேய்த மழையினால் கோடை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
The post சமூக குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி கோவையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை appeared first on Dinakaran.
