கஞ்சா விற்றவர் சிக்கினார்

கோவை, ஏப். 29: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீ ராம் காலனி கருவேப்பிலை தோட்டம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குனியமுத்தூர் ஸ்ரீ ராம் காலனியை சேர்ந்த ஹக்கீம் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஹக்கீமை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்றவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: