பட்டுக்கோட்டை : 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றம் திறன்படிப்பு கல்வி உதவி தொகைக்கான தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய வருவாய் வழி மற்றம் திறன் படிப்பு கல்வி உதவி தொகை தேர்விற்கான சிறப்பு பயிற்சி மையம் பட்டுக்கோட்டை ஜெயாலயம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெற்று வந்தது.
பயிற்சி மையத்தில் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 64 மாணவர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த தேர்வில் 21மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா ஜெயாலயம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் மீனாசுந்தரி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் செல்வகுமாரி முன்னிலை வகித்தார்.
கண்டியன்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மணிமேகலை வரவேற்றார். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களை பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் பாராட்டி சிறப்புரையாற்றினார். சிறப்பு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் விளக்கிக் கூறினார்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அருணா, விஜயா, ராணி, ரவி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பாண்டியன், புவியரசு, ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலும் முதன்மை இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஜெயாலயம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன் மற்றும் தொண்டு நிறுவன உதவி கவர்னர் ஜெகநாதன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முருகன் மற்றும் தங்கையன், ரெஜினால்டு செல்வகுமார், ஜெயசீலன், விமல்ராஜ், சங்கர், மொய்தீன் அப்துல்காதர், ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
The post என்எம்எம்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.