18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று 82,811 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,913 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.24 கோடி கிடைத்தது.

இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியுள்ளது. இலவச தரிசன பக்தர்கள் சுமார் 18 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசித்தனர்.

The post 18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: