அதேபோல் உலகபிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருமலைக்கு வரும் ஆர்டிசி பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அலிபிரி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதுதவிர மலைப்பாதைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏழுமலையான் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி; திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் தீவிர சோதனை appeared first on Dinakaran.