2021 சட்டமன்ற பொதுதேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு முதல்வர் என்ன சொல்கின்றார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் ரத்து செய்து இருப்போம் என்கிறார். எப்பொழுது பார்த்தாலும் திமுககாரர்களும், திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும், அதிமுக – பாஜ கூட்டணி என்று அனைவரும் அறிக்கை விடுகின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிக்கை விடுகின்றனர். இன்றைக்கு முதலமைச்சர் அப்படியே துடிதுடிக்க பேசுகின்றார். நாங்கள் கூட்டணி வைத்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்?
அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், அது எங்களுடைய விருப்பம், எங்களுடைய கட்சி. அதிமுக நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுதேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகதான் கூட்டணி வைக்கின்றார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பலம் வாய்ந்த கூட்டணி என்று சொல்கின்றீர்களே, அதுபோல் நாங்களும் பலம் வாய்ந்த கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் அமைப்போம், நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவுடன் கூட்டணி ஏன்? எடப்பாடி விளக்கம் appeared first on Dinakaran.
