பல்லடத்தில் 3 பேர் கொலை: சிறை கைதியிடம் சிபிசிஐடி விசாரணை


திருப்பூர்: பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கோவை சிறை கைதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமார் (46) ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி தோட்டத்து வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், டிஜிபி உத்தரவின்படி, கோவை மண்டல சிபிசிஐடி எஸ்.பி. தேவி தலைமையில் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவரை காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக பல்லடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post பல்லடத்தில் 3 பேர் கொலை: சிறை கைதியிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: