குஜராத் மக்கள் மிகச் சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் படேலை அளித்தீர்கள். ஆனால், இன்று குஜராத்தில் நம்முடைய செல்வாக்கு குறைந்துள்ளது. மாவட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்தபோது, நம்மிடையே உள்ள போட்டியானது ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர்கள் கூறினர். இரண்டாவதாக, உள்ளூர் மக்களுக்கு தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
மாவட்டத்தை அகமதாபாத்திலிருந்து இயக்கக் கூடாது; மாவட்டம் மாவட்டத்திலிருந்தே இயங்க வேண்டும். மாவட்டத் தலைவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத் தலைவருக்கு பொறுப்பும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணியை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்’ என்று கூறினர்.
The post குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: ராகுல்காந்தி அழைப்பு appeared first on Dinakaran.
