புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்து,\\”இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்பது மட்டுமில்லாமல், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வேண்டுமானால் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகி மனுதாரர் நிவாரணம் கேட்கலாம்’’ எனக்கூறி அய்யாக்கண்ணு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு வழக்கு; உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.