பாதுகாப்பு படையினருடன் மோதல் சட்டீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டு கொலை

பிஜாப்பூர்: சட்டீஸ்கரில் பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய வனப்பூங்கா பகுதியையொட்டிய ஒரு காட்டுக்குள் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திராவதி தேசிய வனப்பூங்கா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள், பிஜாப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் ரிசர்வ் காவல்படையினர், சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நக்சல் தேடுதல், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

The post பாதுகாப்பு படையினருடன் மோதல் சட்டீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: