இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. சுதி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 வயது வாலிபர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இவர் இறந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் போலீஸ் ஏடிஜிபி ஜாவேத் ஷமிம் அளித்த பேட்டியில், ‘‘உள்ளூர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
இதற்கிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத்தில் வீட்டில் இருந்த தந்தை, மகன் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். கலவரக்காரர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிச் சென்றதோடு தந்தை, மகனை கத்தியால் குத்திக் கொன்றதாக குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மம்தா அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக எதிர்க்கட்சியான பாஜ குற்றம்சாட்டுகிறது. மேலும், ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் பாஜவின் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.
* வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. எந்தவொரு வன்முறைச் செயலையும் நாங்கள் மன்னிக்கவில்லை. சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. அவர்களின் ஆத்திரமூட்டலுக்கு அடிபணிய வேண்டாம். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம். பிறகு ஏன் வன்முறை நடக்கிறது?’’ என கூறி உள்ளார்.
The post வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது மேற்கு வங்க போராட்டத்தில் 3 பேர் படுகொலை: போலீஸ் துப்பாக்கி சூடு; வாகனங்கள் எரிப்பு appeared first on Dinakaran.