இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வருவாய் துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 2024ம் ஆண்டு டிசம்பர் வரை 806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு நிலுவை உள்ளது. இந்த இழப்பீடுகளை வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த தொகைகளை விரைந்து வழங்குவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிலுவை இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தொகை நிலுவை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.