தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: