அப்போது ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள வக்பு திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். மேலும் சந்திப்பின் போது, முன்னாள் முதல்வர் கலைஞர் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இஸ்லாமிய சமுதாயம் கோரிக்கை வைத்து வருகிறது.
தங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக்கத்தின் தலைவர் துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு: வக்பு சட்டம் தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தனர் appeared first on Dinakaran.
