அண்ணாநகர்: நாளை பங்குனி உத்திரம் முன்னிட்டு, இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 400 ரூபாயில் இருந்து 600க்கும் ஐஸ் மல்லி 200ல் இருந்து 300க்கும் முல்லை 400ல்இருந்து 750க்கும் ஜாதிமல்லி 450 இருந்து 750க்கும் கனகாம்பரம் 300ல் இருந்து 500க்கும் சாமந்தி 60 இருந்து 180க்கும் சம்பங்கி 150ல் இருந்து 240க்கும் அரளி பூ 200ல் இருந்து 350க்கும் சாக்லேட் ரோஸ் 120ல் இருந்து 160 க்கும் பன்னீர் ரோஸ் 80ல் இருந்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’நாளை பங்குனி உத்திரம் முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்ததை அடுத்து வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் முடிந்த பிறகு மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது’ என்றார்.
The post நாளை பங்குனி உத்திரம் முன்னிட்டு கோயம்பேட்டில் பூ விலை உயர்ந்தது appeared first on Dinakaran.