சத்தம் ேபாடக்கூடாது என்று மிரட்டியவாறு நகைகள் எங்கு உள்ளது என்று கமலேவணியிடம் கூட்டனர். பின்னர் கமலவேணி கூறியபடி பீரோவை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும் கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோட்டை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து தம்பதி இருவரும் கையில் கட்டியிருந்த டேப்பை வாயால் கடித்து அவிழ்த்து வீட்டுக்கு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் துவரங்குறிச்சி போலீசில் மகாலிங்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
The post துவரங்குறிச்சி அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 21 பவுன் துணிகர கொள்ளை: முகமூடி ெகாள்ளையர் கைவரிசை appeared first on Dinakaran.