கோவை: கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை (வியாழக் கிழமை) வழக்கம் போல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருவிக்குச் செல்லும் சாலையின் சீரமைப்புப் பணிக்காக இன்று குற்றாலம் அருவி மூடப்பட்டது. சுமார் 2.8 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை வழக்கம் போல அனுமதி appeared first on Dinakaran.