ரூ.1,332 கோடியில் திருப்பதி -காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரூ.1,332 கோடியில் திருப்பதி -காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 400 கிராமங்கள் மற்றும் 14 லட்சம் மக்களை இணைக்கும் வகையில் இரட்டை ரயில் பாதை அமையும். 104 கி.மீ. தூர ரயில் பாதை பிரிவை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

The post ரூ.1,332 கோடியில் திருப்பதி -காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: