டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்


திருச்சி: திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று நேரில் ஆஜரானார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று(7ம் தேதி) சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் ஆஜராகவில்லை. டிஐஜி வருண்குமார் ஆஜரானார். சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் ேகார்ட்டில் ஆஜராகவில்லை, எனவே சீமான் நாளை(இன்று) கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ேபாது வக்கீலுடன் சீமான் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார்.

இதேபோல் டிஐஜி வருண்குமாரும் வந்திருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன் சீமான், டிஐஜி வருண்குமார் ஆஜராகினர். பின்னர் நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார். மதியம் வழக்கு விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சீமான், டிஐஜி வருண்குமார் காத்திருந்தனர்.

அழையா விருந்தாளியாக உள்ளே சென்ற சீமான்
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக மற்ற வழக்குகள் விசாரணை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நடந்து கொண்டிருந்தது. அப்போது, தவறுதலாக சீமானை அவரது வக்கீல் நீதிமன்றத்துக்குள் அழைத்து சென்றார். அப்ேபாது அவர்களை பார்த்த நீதிபதி விஜயா, நான் உங்களை அழைக்கவே இல்லையே. ஏன் உள்ளே வந்தீர்கள் என்று சீமானை பார்த்து ேகட்டார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சீமான், தனது காரில் வந்து அமர்ந்திருந்தார்.

The post டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: