வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. அது இன்று வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், நாளை வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து, தென் மேற்கு வங்கக் கடல் வழியாக தென் தமிழகம் வரையில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

The post வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: