இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.இதை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஈடி தரப்பில் தெரிவிக்கப்பட் டதை தொடர்ந்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
The post பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு; விசாரணையை ஒத்திவைக்க கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் appeared first on Dinakaran.