குறிப்பாக ஆட்டோமொபைல், மருந்து மற்றும் விவசாயம் துறை கடுமையாக பாதிக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,நேற்று மக்களவையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு முறை பற்றி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், வக்பு மசோதா நிறைவேற்றம் பற்றி காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதை குறிப்பிட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இதில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை கண்டித்து ஊர்வலமாக சென்ற எம்பிக்கள் இது பற்றி நாடாளுமன்றத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
The post நாடாளுமன்ற வளாகத்தில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து காங்.எம்பிக்கள் போராட்டம்: அரசு பதிலளிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.