இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், அதிக லாபத்திற்காக விலையை குறைத்து வருவதாகவும், இலவம் பஞ்சுக்காக என்று எந்த ஒரு சந்தையும், கமிஷன் மண்டியும் இல்லாத சூழ்நிலையில் வியாபாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டி தாலுகா, தும்மக்குண்டு ஊராட்சி வாலிப்பாறை மற்றும் சுற்றுவட்டார 24 கிராம விவசாய பொதுமக்கள் சார்பில், இலவம் பஞ்சுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கதர் கிராம வாரியம் மூலம் அரசு நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
The post இலவம்பஞ்சுக்கு ஆதார விலை கோரி கலெக்டர் அலுவலகத்தில் வருசநாடு விவசாயிகள் மனு appeared first on Dinakaran.
