ஆதார்-வாக்காளர் இணைப்பு: ஆதார் கொடுக்க மறுக்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி : வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்பாதவர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விலக்கு அளிக்க வேண்டும் என்ற விதியை உருவாக்குவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போலி வாக்காளர்களை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான திட்டத்தை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் ஒன்றிய உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய முடிவுப்படி, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி இணைக்க முடியாது என்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஆதார் எண்ணை வழங்க விரும்பாதவர்கள் தேர்தல் அதிகாரியிடம் நேரில் ஆஜராகி தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக 6பி என்ற விண்ணப்பத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவும் தேர்தல் ஆணையம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

The post ஆதார்-வாக்காளர் இணைப்பு: ஆதார் கொடுக்க மறுக்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: