நாகை: சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகார் மீனவர்கள் 7 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் 7 பேரை, நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் பிடித்தனர். இவ்விவகாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது நாகை மீனவர்கள் ஏற்கனவே புகாரளித்திருந்த நிலையில், நாகை துறைமுகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post சுருக்குமடி வலை பயன்படுத்திய மீனவர்களிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.