எனினும், இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விவாகரத்து வழக்கவில்லை. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவி பாலியல் படங்கள் பார்ப்பதோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதோ கணவரை துன்புறுத்தும் குற்றம் இல்லை. அது அவரின் தனியுரிமை. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் செய்வதை குற்றமாக கருத இயலாது என கரூரைச் சேர்ந்த நபர் மேற்கண்ட காரணங்களைக் குறிப்பிட்டு தனக்கு விவாகரத்து கோரியிருந்த நிலையில், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
The post தனது மனைவி செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல் !! appeared first on Dinakaran.