பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு

கோவை, மார்ச் 18: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (39). இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் நுழைந்த கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தொண்டாமுத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சந்தோஷ், அங்கிருந்த நாகபாம்பினை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நாகப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு appeared first on Dinakaran.

Related Stories: