இந்நிலையில் கடந்த 15ம் தேதி மனைவி பாண்டிச்செல்வி உடல்நிலை சரியில்லாத 2 மகன்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, மனைவி மீது இருந்த சந்தேகம் காரணமாக வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தீபாஸ்ரீயை, தந்தை குமார் சுவரில் அடித்து கொன்றுள்ளார். திரும்பி வந்த மனைவியிடம் குழந்தை கீழேவிழுந்து அடிபட்டு விட்டதாக நாடகம் ஆடியுள்ளார். உடனடியாக குழந்தையை எழுமாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பாண்டிச்செல்வி கொண்டு சென்றார். பின்னர், மேல் சிகிச்சைக்கு மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே குழந்தை இறந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் குழந்தையை அடித்து கொன்றதை குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
The post மனைவி மீது சந்தேகத்தால் ஆத்திரம் ஒன்றரை வயது குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை appeared first on Dinakaran.