கன்னியாகுமரி, மார்ச்.14:கன்னியாகுமரி கொட்டாரம் அச்சன்குளத்தைச் சேர்ந்தவர் பால் நாடார் ( 75). தென்னைமரம் ஏறும் தொழிலாளி. நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற போது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பால் நாடார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கால் தடுமாறி கீழே விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.
