அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (13.03.2025) காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து நாளை பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த 2 ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். என்று கூறப்பட்டுள்ளது.
The post பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.
