ஐபிஎல் போட்டியின் போது புகையிலை தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் : ஒன்றிய அரசு

டெல்லி : ஐபிஎல் போட்டியின் போது புகையிலை தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு [பிசிசிஐ] ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தின் வளாகங்களில் புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்றும் புகையிலை மற்றும் மதுபான தயாரிப்புகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் போட்டியின் போது புகையிலை தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: