இதையடுத்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சினிமா தயாரிப்பாளரான சவுத்ரி மீது அவதூறு பரப்புதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சினிமா தயாரிப்பாளர் சவுத்ரி மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
The post திருமாவளவன் குறித்து அவதூறு சினிமா தயாரிப்பாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
