நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால் கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்க செயலாளருக்கு தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். எந்தவித பதிலும் வராததால் குட்கட்பள்ளி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். போலீசார் சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி இருப்பது தெரிந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதற்கு பிறகு இன்று காலை நினைவு திரும்பியதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்புவார் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
The post அதிகளவு மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பிரபல பாடகி கல்பனாவுக்கு நினைவு திரும்பியது appeared first on Dinakaran.
